டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மாநிலங்களவை எம்பி பதவிக்கு அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் மனுத்தாக்கல்: பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். மகன் துணை முதலமைச்சராக வாய்ப்பு. பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? : ஜே.டி.யு. தொண்டர்கள் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்.
* பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து குளறுபடி செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்கத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
* சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை; தமிழ், தமிழ் என்று மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதலமைச்சர் உதயநிதி காட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நிதிஷ் ‘எங்களுடன் இருந்திருந்தால் இந்த நாளைக் கண்டிருக்க மாட்டார்’: பீகார் முதலமைச்சரின் மாநிலங்களவை நியமனத்திற்கு தேஜஸ்வி கருத்து. பீகாரில் அதிகார மாற்றம்: நிதிஷ் குமாரை பாஜக கடத்தி சென்றுவிட்டதாக தேஜஸ்வி விமர்சனம் மகாராட்டிராவில் என்ன நடந்ததோ அதன் மேம்பட்ட வடிவம் இது. கூட்டணி வைக்கும் கட்சிகளின் கதையை முடிக்கும் வரலாற்றைக் கொண்டது பாஜக.
தி இந்து:
* ‘பாபர் மசூதி குறித்து அன்றைய உ.பி. முதலமைச்சர் கல்யாண் சிங் அப்பட்டமான பொய்யைச் சொன்னார்’, முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பேட்டி.
தி டெலிகிராப்:
* பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.6,769 கோடி: 2024-2025 ஆம் ஆண்டில் ஆறு தேசியக் கட்சிகள் (பாஜக, அய்என்சி, சிபிஅய்(எம்), ஆம் ஆத்மி, பிஎஸ்பி மற்றும் என்பிஇபி) மொத்த வருமானம் ரூ.7960.09 கோடி என்று அறிவித்தன, அதில் பாஜகவின் பங்கு 85.03 சதவீதமாகும்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘மோதல் நமது கொல்லைப்புறத்தை அடைந்து விட்டது’: இந்தியப் பெருங்கடலில் ஓர் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை எதையும் கூறவில்லை; இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை, எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவு.
– குடந்தை கருணா
