பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்

1 Min Read

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்  நிறுவனத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்

 

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வல்லம், ஏப்.13 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சிறந்த தரமான கற்றல் கற்பித்தல் செயல் முறைகள், பாலிடெக்னிக் கல்லூரி யின் கல்விசார் நடை முறைகள், பாடத்திட்டம் சாரா நடைமுறைகள், மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஆகிய கல்லூரியின் சிறப்பான செயல் பாடுகள் குறித்து 20.01.2023 முதல் 22.01.2023 வரை தேசிய அங்கீகார வாரியம்(National Board of Accreditation) ஆய்வு செய்து இக் கல்லூரியின் 

1. கணினியியல் (Computer Engineering),

2. மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல்(Electronics and Communication Engineering),

3. மின்னியல் மற்றும் மின்னணுவியல்(Electrical and Electronics Engineering)

4. இயந்திரவியல் (Mechanical Engineering) ஆகிய துறைகளுக்கு 2023 முதல் 2026 வரை மூன்று ஆண்டு களுக்கான தேசிய அங்கீகாரம் (NBA Accreditation)  வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறு வனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் இச் சிறப்புமிகு தேசிய அங்கீகாரத்தை (NBA Accreditation)பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை பாராட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *