கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.3.2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 28 + 1 = திமுக – காங்கிரஸ் தொகுதி ஒப்பந்தம்: திமுக – காங்கிரஸ் இடையே நடந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எடப்பட்டு, நேற்று (4.3.2026) இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு.
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகுகிறார்; மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்பு; மகனை துணை முதல்வராக்க முடிவு. பாஜக முதலமைச்சர் பதவியை தட்டிச் செல்கிறது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் 130 ஜாதிப் பட்டியலில் 90 ஜாதிகள் மட்டுமே ஓபிசி பிரிவில் உள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பில் குழப்பம். அனைத்து 130 ஜாதிகளையும் ஓபிசி பிரிவில் சேர்த்திட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மகா விகாஸ் அகாடி (MVA) தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சரத் பவாரை அதன் ஒரே மாநிலங்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தது.

தி இந்து:

* திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தித் திணிப்பு மையால் அழித்து திமுக போராட்டத்தால் அகற்றம். அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு.

தி டெலிகிராப்:

* இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கடற்படை கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது; இந்தியாவிற்கு அதன் சொந்த சுற்றுப்புறத்தில் எந்த செல்வாக்கும் இல்லையா? அல்லது அந்த இடம் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் நிறுவனங்களுக்கு அமைதியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா,” என காங்கிரஸ் கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கருநாடகாவில் எஸ்.சி. உள் ஒதுக்கீட்டில் குழப்பம்: பட்டியல் ஜாதியினருக்கான உள் இட ஒதுக்கீடு இல்லாமல் 56,432 அரசு பதவிகளை நிரப்பும் முடிவை கருநாடக அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. எஸ்.சி. பிரிவினர் மற்றும் அமைச்சர்களின் அழுத்தத்தை தொடர்ந்து, தற்போது உள்ள 15% எஸ்.சி. ஒதுக்கீட்டிற்குள் விகிதாசார உள் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்.
– குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *