உக்ரைனில் படிப்பை இடையில் நிறுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே தகுதித்தேர்வு எழுதலாம்!

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப். 13- போரினால் உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கு தகுதித் தேர்வினை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று உக்ரைன் அறிவித்துள்ளது. புதுடில்லி, உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படித்து வந்தனர். அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத் ததைத் தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது அதைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் அங்கு தங்கள் மருத்துவ படிப்பைத் தொடர முடியாத சூழல் உரு வானது. அந்த மாணவர்களை இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப அழைத்து வருவதே பெரும் சவாலானது. ஒரு வழியாக நாடு திரும்பிவிட்ட அந்த மாணவர்கள், தங்கள் மருத்துவப் படிப்பை தொடர முடியாத சூழல் உருவானதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. 

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மாண வர்கள் தரப்பில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மாணவர் களுக்கு அரசு உதவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து உக்ரைனில் மருத்து வம் படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு தரப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற் கொண்டார். அவர் ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மாவை  சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது, உக்ரைனில் மருத்துவ படிப்பைத் தொடர முடியாமல் போன இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாண வர்கள், தங்கள் நாட்டில் ஒருங்கிணைந்த தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அனுமதிக்கும் என்று தெரிவித்தார். இதை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகையால், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்களும் பலன் பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *