திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு 12.4.2023 அன்று பெரியார் மாளிகை தங்காத்தாள், மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், விமல், சாந்தகுமார், செந்தில், ரகுராம், சிரஞ்சீவி, அர்ஜுன் மாலை அணிவிதது மரியாதை செலுத்தினார். இன்று (13/4/2023) இறுதி நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாநகரத் தலைவர் ச. துரைசாமி, காட்டூர் ம. சங்கிலி முத்து, விடுதலை கிருட்டினன், காட்டூர் கனகராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், தில்லை நகர் ராமதாஸ், துவாக்குடி கிளை செயலாளர் அன்பழகன், ஓட்டுநர் செந்தில் ஆகிய தோழர்கள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவர் உடலை தூக்கும் பொழுது தோழர்கள் வீரவணக்கம் கூறி வண்டியில் ஏற்றினார்கள்.
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு மாலை அணிவிதது மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books