சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 2– மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகளின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 20.93 கோடி மதிப்பிலான 6 முக்கியத் திட்டப் பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய திட்டப் பணி

ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி, ராமா தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (1.3.2026) திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் ரூ. 4.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொள்கை மற்றும் ஆளுகைக்கான அனுபவக் கற்றல் மய்யத்தையும் (Experience Learning Centre), மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், நூர் வீராசாமி தெருவில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார மய்யத்தையும், வெள்ளாளர் தெருவில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையையும் அவர் திறந்து வைத்தார்.

இதையடுத்து, அண்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை சென்னை நடுநிலைப் பள்ளியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்தையும், அண்ணா சாலையில் ரூ. 3.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு சமூக நீதிப் பூங்கா’வையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைச் செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *