டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உறையூர், மார்ச் 1– திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பரிசு வழங்கும் விழா 15.02.2026 அன்று மாலை 6 மணியளவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து சிறப்பித்தார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் சிறுபான்மை துறை அமைப்பின் துணைத் தலைவர் பொறியாளர் பாட்ரிக் ராஜ்குமார், தமிழ்நாடு டேக்வாண்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.ஆர்.சித்தேஷ்வரன் மற்றும் திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட அளவில் 14.02.2026 அன்று நடைபெற்ற இப்போட்டியில் தனிநபர் பிரிவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவிகள் எம்.ரம்யா மற்றும் ஏ.சரோஜா தேவி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும், மாணவி எம்.ரோஷினி, மாணவர் எஸ்.தீபன் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் துறை மாணவிகள் பூ.சோனாலி, ம.பேபி ஷாலினி, த.புவனா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றதுடன் மாணவி ௧.நந்தினி தேவி வெண்கலப் பதக்கத்தினையும் தட்டிச் சென்றார்.

இத்தகைய சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 15.02.2026 அன்று நடைபெற்ற திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பரிசு வழங்கும் விழாவில் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரிசு வென்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *