கலைவழி நின்ற சமூக நீதித் திரையும்-அரசியலும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கலைப்பயணம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாணன்

தமிழ்நாட்டின் அரசியலுக்கும் சினிமாவிற்கும் இடையிலான பிணைப்பு மிகவும் ஆழமானது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சினிமா ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது. இந்த வரலாற்றுப் பின்புலத்தில், மு.க. ஸ்டாலின் ஒரு நடிகராகத் திரையில் தோன்றியது, பொழுதுபோக்குக்காக அல்ல; மாறாக, அவர் சார்ந்துள்ள சமூக நீதி மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் ஒரு கருவியாகவே அமைந்தது.

நடித்த திரைப்படங்கள்:
ஒரு கொள்கைப் பிரகடனம்

தமிழ்நாடு

எண்பதுகளில் மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படங்கள், அவர் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலால் உருவானவை. குறிப்பாக, இரண்டு முக்கியமான திரைப்படங்களை நாம் குறிப்பிடலாம்:

ஒரே ரத்தம் (1987):

தமிழ்நாடு

இத்திரைப்படம் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான வலுவான குரலாக அமைந்தது. இதில் மு.க.ஸ்டாலின் ஏற்று நடித்த கதாபாத்திரம்,ஜாதி மறுப்புத் திருமணங்கள் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அக்காலகட்டத்தின் சமூக அவலங்களுக்கு எதிரான நேரடி அரசியல் விமர்சனமாகவே பார்க்கப்பட்டது.

மனிதர்களுக்கு இடையே ஜாதி, மத பேதங்கள் தேவையில்லை என்பதை மய்யமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். சமூக ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் போதிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்திருந்தன.

மக்கள் ஆணையிட்டால் (1988)

மு.க.ஸ்டாலின் நடித்த மற்றொரு முக்கியமான திரைப்படம் ‘மக்கள் ஆணையிட்டால்’.

இது அரசியல் கலந்த ஒரு சமூகத் திரைப்படமாகும். அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் மையமாக வைத்து இப்படம் உருவானது.

எளிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் ஒரு போராளியாக இதில் அவர் நடித்திருப்பார். இது அவருடைய அரசியல் பிம்பத்திற்கும், பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட மக்கள் பணிகளுக்கும் ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

திரைப்படம் மட்டுமல்லாது, ‘குறிஞ்சி மலர்’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘முரசே முழங்கு’ போன்ற எண்ணற்ற மேடை நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நாடகங்கள் பெரும்பாலும் பகுத்தறிவு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் உரிமை போன்ற சமூக நீதி கருத்துகளைப் பரப்புவதற்காகவே மேடையேற்றப்பட்டன.

கலைக்கும் அரசியலுக்குமான இடைவெளி

மு.க. ஸ்டாலின் ஒரு முழுநேர நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதும், திரையுலகத்திலிருந்து முழுமையாக விலகினார். இதைப் பற்றிப் பார்க்கும் போது சில விசயங்கள் தெளிவாகின்றன:

திரையுலகையும்; சமூக மாற்றத்திற்கான கருத்துகளைப் பரப்பும் பல மேடைகளில் ஒன்றாக பாவித்தார்   அவர் நடித்த படங்களில் வரும் வசனங்களும், காட்சிகளும் அன்றைய திராவிடக்  கொள்கைகளான சமூக நீதி (Social Justice) மற்றும் சுயமரியாதை (Self-Respect) ஆகியவற்றைத் தாங்கியிருந்தன.

இயக்கப்பணியில் சினிமா என்பது ஒரு பரப்புரைச் சாதனம் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் அதன் மூலம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அத்தோடு களப்பணியின் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர அரசியலில் முழு கவனத்தையும் திருப்பினார்.

மு,க.ஸ்டாலின் நடித்த படங்கள் சமூகநீதி என்ற பெரும் நோக்கை மக்களிடம் கொண்டு செல்லப் திரையில் அவர் பேசிய வசனங்கள் வெற்றுச்சொற்களாக நின்றுவிடவில்லை இன்று முதலமைச்சராக அவர் முன்னெடுக்கும் ‘திராவிட மாடல்’ நிர்வாகம் மற்றும் சமூக நலத்திட்டங்கள், அவர் அந்தப் படங்களில் பேசிய நீதியின் கல்வெட்டாக உள்ளது.

பிறந்த நாள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகப் புரட்சியாளர்களான அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரின் பிறந்தநாட்களைப் பின்வருமாறு அறிவித்துள்ளார்:

அண்ணல் அம்பேத்கர்
ஏப்ரல் 14 சமத்துவ நாள்

தமிழ்நாடு

சமத்துவ நாள் (அம்பேத்கர்): அம்பேத்கரின் பிறந்தநாளைச் ‘சமத்துவ நாள்’ எனக் கொண்டாடுவதன் மூலம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் அனைவருக்குமான சம உரிமையை வலியுறுத்த அரசு இந்த முடிவை எடுத்தது. இந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

தந்தை பெரியார்
செப்டம்பர் 17 சமூக நீதி நாள்

தமிழ்நாடு

சமூக நீதி நாள் (தந்தை பெரியார்): பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடி, சாதி மற்றும் பாலின பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்கப்படுகிறது.

வள்ளலார்
அக்டோபர் 5 தனிப்பெருங்கருணை நாள்

தமிழ்நாடு

தனிப்பெருங்கருணை நாள் (வள்ளலார்): “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலாரின் பிறந்தநாளை, மனிதநேயத்தையும் ஜீவகாருண்யத்தையும் போற்றும் வகையில் ‘தனிப்பெருங்கருணை நாள்’ என அரசு அறிவித்தது.

இந்த மண்ணில் பிறந்த அனைத்துமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த உன்னத  தலைவர்களின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த அறிவிப்புகளின் முக்கிய நோக்கம் என்று ஆகும்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *