துணை முதலமைச்சர் பொறுப்பில் ஸ்டாலின் ஓராண்டு பணி மிகவும் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:-
செய்தியாளர்: மு.க. ஸ்டாலின், துணை முதல
மைச்சர் பதவியை ஏற்று இன்றுடன் ஓராண்டு முடிகிறது.அவருக்கு பத்திரிகையாளர் சார்பில் வாழ்த்து தெரிவிக்கின்றோம். அவரது ஓராண்டு காலச் செயல்பாடு எப்படி இருந்தது? உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
முதலமைச்சர் கலைஞர் பதில்: திருப்தி அளிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது. அவர் பதவியேற்ற போது எதிர்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவேன் என்று சொல்லியிருந்தார். அப்படி செயல்பட அவரால் முடிந்திருக்கிறதா?
அரசுக்குப் பலமாகவும், எதிர்கட்சிகளோடு இணைப்புப் பாலமாகவும் செயல்படுகிறார்.
– முதலமைச்சர் கலைஞர்
– ‘தமிழினத் தளபதி’,
ஜூன் 2010
