சென்னை, பிப்.28 மதுபான கொள்கை வழக்கில் டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டில்லி நீதிமன்றம் விடுவித்தது.
டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத் தில் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* டில்லி மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி ஒன்றிய பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்.
* உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது.
* ஒன்றிய அரசின் பழிவாங்கல் போக்கை எதிர்த்த கெஜ்ரிவாலின் இறுதி வரை உறுதியான போராட்டத்திற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
