உழைப்பின் உருவம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உரிமையோடு எங்களை வரவேற்க – தட்டிக் கொடுக்க – ‘அடுத்த பயணத்திற்கு ஆளாகுங்கள்’ என்று உற்சாகப்படுத்த இங்கே வருகை புரிந்திருக்கின்றார் – இந்தியாவினுடைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவருடைய ஒப்பற்ற உழைப்பைப் பார்க்கும் பொழுது, என்னுடைய அலைச்சல் எல்லாம் பெரிதல்ல. முன்பு, நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 95 ஆண்டுகால உழைப்பையும் பார்த்து அதற்குப் பிறகு. இப்பொழுது நம் கண்முன்னாலே உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர். அவர் எப்பொழுது தூங்குகிறார். எப்பொழுது ஓய்வெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இரவு 12:00 மணிக்கு சாலை சரியாகப் போடப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கிறார். இதற்கு அடிப்படை அவர் கற்றுக்கொண்ட இடம் அப்படி!

புதிதாக சட்டமன்றம் என்று கட்டுகின்ற நேரத்தில், விடியற்காலை 3:30 மணிக்கு அதிகாரிகளை அழைப்பார். அதற்கு முன்பாகவே அவர் அங்கே சென்றுவிடுவார். அதிகாரிகள் பிறகுதான் வேக வேகமாக ஓடிவருவார்கள். அப்படி அருமையாக உழைத்த உழைப்பின் பெயர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.கலைஞர் அவர்களே ‘உழைப்பின் உருவம்’ என்று பாராட்டிய பெருமை இன்றைய முதலமைச்சருக்கு உண்டு.

(25.4.2022 சென்னை பெரியார் திடலில் நீட் எதிர்ப்பு பெரும்பயண நிறைவு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரையிலிருந்து)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *