விநாயகர் கோயிலில் கட்டணக் கொள்ளை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இணை ஆணையரிடம் பக்தர்கள் புகார்

தாம்பரம், பிப். 28– மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் கோயில் பக்தர்கள் சார்பில், காஞ்சிபுரம் மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையரிடம். புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணக் கொள்ளை

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் பேருந்து நிலையம் அருகே செல்வ விநாயகர், கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. கோயில் உற்சவங்களுக்கு ரூ.150-க்கு மட்டுமே ரசீது வழங்கப்படுகிறது. அதுவும், அண்மைக் காலமாக வழங்கப்படுவதில்லை.

பக்தர்களிடம் இருந்து அதிகமான தொகையை வசூல் செய்கின்றனர். பிரதோஷ உற்சவ கட்டணமாக ரூ.6,000 வசூலிக்கப்படுகிறது. ஆனால் பால், தயிர், சந்தனம், இளநீர், பழம், வாசனை திரவியம் உள்ளிட்ட பொருட்களை, பொதுமக்களிடம் இருந்து சேகரித்து அபிசேகம் செய்கின்றனர்.

இந்த பணத்தை, சொந்த ஜி-பே மூலமே வாங்குகின்றனர். இது போல் பல சம்பவங்கள் நடக்கின்றன. இக்கோயிலில் நடக்கும் கட்டண கொள்ளை குறித்து, செயல் அலுவலரிடம் பல முறை புகார் கொடுத்தும் அவர் கண்டு கொள்வதே இல்லை. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்சவங்களுக்கு உரிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும்

215 மருந்துகள் தரமற்றவை;
3 மருந்துகள் போலியானவை

மருந்து தரக் கட்டுப்பாட்டு
வாரிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை, பிப். 28– இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (சிடிஎஸ்சிஓ) தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவுகள் பின்வருமாறு:

காய்ச்சல், சளி, கிருமித் தொற்று மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 215 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

போலி மருந்துகள்

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் இருந்த 3 மருந்துகள் முற்றிலும் போலியானவை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு

தரமற்ற மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

தரமற்றதாக அறிவிக்கப்பட்ட மருந்துகளின் முழு பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdsco.gov.in/ என்பதில் பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். மருந்துகளை வாங்கும் போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

சென்னையில்  மார்ச் 2, 3 தேதிகளில்

வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்!

தமிழ்நாடு

சென்னை, பிப். 28– தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் சிரமமின்றி பெறும் வகையில், நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

விநியோக தேதிகள்

மார்ச் 2 மற்றும் 3ஆம் தேதிகள்.

பயன்பெறும் பகுதிகள்: சென்னை மாநகராட்சியின் அனைத்து 15 மண்டலங்களும் (அண்ணாநகர் முதல் சோழிங்கநல்லூர் வரை) இதில் அடங்கும்.

கடைகளின் எண்ணிக்கை

கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 990 ரேசன் கடைகள் இந்த பணியில் ஈடுபடும். அந்தந்தப் பகுதி ரேசன் கடை விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை நேரடியாகக் குடும்ப அட்டையதாரர்களின் இல்லங்களுக்கே கொண்டு வந்து வழங்குவார்கள்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்.  முதியவர்கள் மற்றும் ரேசன் கடைக்குச் செல்ல இயலாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த ‘வீடு தேடி வரும் சேவை’ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *