சேதுராயன்குடிக்காடு, பிப்.27- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.ராஜப்பன் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார்
திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,மாவட்டச் செயலாளர்அ.அருணகிரி,பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், தஞ்சை ஈ.பி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, ஆகியோர் சேதுராயன்குடிக்காடு மா.இராஜப்பன் இல்லத்திற்கு சென்று அவர்களின் உடல் நிலையை விசாரித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி யில் மா.ராஜப்பன் அவர்களிடமும் அவரது மகனிடமும் உடல் நலம் குறித்தும் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார் (24.02.2026)
மா.ராஜப்பன் அவர்களிடம் உடல் நலம் விசாரிப்பு
Leave a Comment
