கேரளாவில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பற்ற பெயர்களே சூட்ட வேண்டும் அரசு உத்தரவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.27 ‘‘கேரளாவில் இனிவரும் காலங்களில் புதிதாகத் தொடங்கப் படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களைச் சூட்டக் கூடாது’’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மதச்சார்பற்றதாக இயங்குவதை உறுதி செய்வதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும். கல்வி நிலையங்கள் மதம் கடந்து, அனைவருக்குமான சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விதிமுறை எதிர்காலத்தில் தொடங்கப் படவிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்ெகனவே செயல்பாட்டில் இருக்கும் அரசு கல்வி நிறுவனங்களின் பெயர் களில் எந்த மாற்றமும் செய்யப்படாது; அவை தற்போதைய பெயர்களிலேயே தொடர்ந்து இயங்கும்.

சமூக நல்லிணக்கம்

 மாணவர்கள் மத்தியில் தொடக்கத்திலிருந்தே மதச்சார்பற்ற சிந்தனையை வளர்க்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள அரசின் இந்த முன்னெடுப்பு, இந்தி யாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதிலும், கல்வித் துறையில் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநிறுத்துவதிலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *