புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சு வாயுக்கள் 2 முக்கிய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, நவ. 5- பெட்ரோல் நிலையங்களில் மாசு கட்டுப்பாடு கருவியை பொருத்தாத காரணத்திற்காக, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவற்றுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அப ராதம் விதித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப் பும் போது, ஆவியாக வெளியேறு கின்ற பெட்ரோல் அதே இடத்தில் சூழ்ந்து நிற்கும். அவ்வாறு ஆவி யான பெட்ரோல் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சு வாயுக்கள் கலந்து இருக்கும் என்று அறிவியல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு வெளியேறுகின்ற பெட்ரோல் ஆவி எங்கும் பரவி விடாமல் தடுக்கும் வகையிலான விஆர்எஸ் கருவிகளை பெட்ரோல் நிலையங்களில் பொருத்த வேண் டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதனை செய்து முடிக்காத நிலையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாயும், பாரத் பெட் ரோலியம் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR)பகுதிக்கு உட் பட்ட சில்லறை விற்பனை பெட் ரோல் நிலையங்களில், Vapour Recovery Systems (VRS)என்ற மாசு கட்டுப்பாடு கருவியை குறிப்பிட்ட காலவரம்புக்குள் பொருத்த வேண் டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தி இருந்தது. அதன்படி, அந்த கருவியை பொருத்தாத நிலையில் இந்தியன் ஆயில் நிறுவ னத்திற்கு ஒரு கோடி ரூபாய் அப ராதம் விதித்து ஒன்றிய மாசு கட்டுப் பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறு கையில், “நிறுவனத்தின் பிற நட வடிக்கைகளுக்கு எந்தவித கட்டுப் பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதேசமயம் இழப்பீடு தொகை என்ற அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதே போல பாரத் பெட்ரோ லிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் பாது காப்புச் சட்டம் பிரிவு 5இன் கீழ் தங்கள் நிறுவனத்திற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரி யம் அனுப்பி உள்ள தாக்கீது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு எந்தவித நடவடிக் கையும் எடுக்க வேண்டாம் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத் திடம் கோரிக்கை வைக்க இருப்ப தாகவும் பாரத் பெட்ரோலிய நிறு வனம் தெரிவித்துள்ளது. முன்ன தாக, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறு வனம் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் இந்த மாதம் 19 ஆம் தேதி தாக்கீது அனுப்பப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *