பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், பிப்.26- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 04.02.2026 மற்றும் 05.02.2026 ஆகிய நாட்களில்  நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப கட்டுரை வாசித்தலில் (Technical Paper Presentation) கட்டட எழிற்கலைத் துறை மாணவிகள் எம்.ஆஷிகா சுல்தானா, ஜெ.ஜெனிஃபர் “Suitable and Green Building Solutions” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர். மேலும் திட்ட விளக்க காட்சியில் (Project Presentation) என்ற போட்டியில் கணினியியல் துறை மாணவர்கள் ஆர்.நவீன்குமார், எம்.சரவணன்  ஆகியோர் “Surveillance  Car” என்ற  தலைப்பில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்.   கட்டட எழிற்கலைத் துறை மாணவி ஜெ.ஜெனிஃபர்   “CAD Modeling” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.  இயந்திரவியல் துறை மாணவர் ஆர்.கோகுல கிருஷ்ணா “Technical Photography” என்ற போட்டியில் மூன்றாம் பரிசை வென்றுள்ளார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் ஆர்.தருண்  பாலாஜி,
எஸ்.அரவிந்த் ஆகியோர் “Electro Fix“ என்ற போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளனர்.  இக்கல்லூரியின் சார்பாக இயந்திரவியல் துறை பேராசிரியர் பெ.மாதவன் மற்றும் கட்டட எழிற்கலைத் துறை பேராசிரியை ஆர்.சவுமியா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப்பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டினார்கள்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *