பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம்

1 Min Read

அரசியல்

வல்லம், ஏப்.14– சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அவ்வை சமூக சேவை நிறுவனம் இணைந்து காரைக்கால் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெ ழுத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மணிவண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர், அவ்வை சமூக சேவை நிறுவனம் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட் டிலிருந்து இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய சிவக்குமார், சமூகப்பணித்துறை தலைவர் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து உழைக்க வேண்டும் என்றார். மேலும் சங்கரி, தலைவர் குழந்தைகள் நலக்குழுமம், காரைக்கால், கருத்துரை வழங்கினார். இவ்விழாவில் ராஜேஸ்வரி ஒருங்கிணைப் பாளர், காந்தஜி  வாழ்த்துரை வழங்கினார். இதில் 60 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியானது, உதவி பேராசிரியர் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் முனைவர் ஞானராஜ் ஆலோசனைப்படி நடைபெற்றது. சமூகப் பணித்துறை 2ஆம் ஆண்டு மாணவி திவ்யா ஒருங்கிணைத்து நடத்தி அனைவருக்கும் நன்றி கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *