டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*வளர்ச்சி இருக்கும் மாநிலத்தில் பாஜக இருக்காது; பாஜக இருந்தால் அங்கு வளர்ச்சி இருக்காது: வன்முறை, வெறுப்பு, பிரிவினை எப்போது நிறுத்துவீர்கள்? இந்த தேர்தல் என்டிஏ vs தமிழ்நாடுதான்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மேற்கு வங்க வாக்காளர்கள் 1.20 கோடி பேருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பிடுங்கி விடும், மம்தா எச்சரிக்கை.
*உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த நிலையில், சர்ச்சைக்குரிய பாட அத்தியாயங்கள் என்சிஇஆர்டி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இனப்படுகொலைக்கு இஸ்ரேல் நாட்டின் மீது உலகம் முழுவதும் கண்டிக்கப்படும் நேரத்தில், பிரதமர் மோடி விலகி நிற்காமலோ அல்லது ராஜதந்திரத்தையோ தேர்வு செய்யவில்லை, மாறாக இஸ்ரேலை கட்டி அணைத்துக் கொண்டுள்ளார்; இது பாலஸ்தீனக் கொள்கைக்கு துரோகம் என சிபிஅய் மாநிலங்களவை உறுப்பினர் பி.சந்தோஷ் குமார் கண்டனம்.
தி இந்து:
* என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறை ஊழல்’ பாடம் நீதித்துறையை அவமதிப்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
* விபி-ஜி ரேம் ஜி சட்டத்தின் விவரங்களுக்கான ஆர்டிஅய் மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசு மறுப்பு: புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டமான விக்ஸித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ரேம் ஜி) சட்டம், 2025அய் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு நடத்திய ஆலோசனை களின் விவரங்களை கோரிய தகவல் அறியும் உரிமை (ஆர்டிஅய்) விண்ணப்பத்தை ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதி வர்மா விசாரணைக் குழு மறு சீரமைக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவை செயலகம் மறு சீரமைத்தது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் சிறீவஸ்தவாவுக்குப் பதில் மார்ச் 6 முதல் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சிறீ சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து நீடிப்பார்கள்.
– குடந்தை கருணா
