10 தொகுதிகளில் விளையாட்டரங்கம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

1 Min Read

சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சட்டப் பேரவையில் விளை யாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற் கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, 61 தொகுதிகளில் ஏற்கெனவே விளையாட்டு அரங்கங்கள் இருப்பது கண்டறி யப்பட்டது என தெரிவித்திருந்தார்.

எனவே, தமிழ்நாட்டில் மீதமுள்ள 173 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட் டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம் உள்பட 10 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க அர சாணை வெளியாகியுள்ளது. அதன்படி, வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், சிறீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி மற்றும் காரைக்குடி சட்டப் பேரவை தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி தரப்பட்டு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *