வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

அரசியல்

திண்டுக்கல்,ஏப்.14– வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல்  நகர திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு திண்டுக்கல் வட்டச் சாலை ஆவின் பாலகத்தின் அருகில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு திண்டுக்கல் நகர தலைவர் அ. மாணிக்கம் தலைமை ஏற்றார். திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை வரவேற் புரை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் நா.கமல் குமார், மண்டல தலைவர் மு. நாகராஜன் தி.தொ.கா.பேரவை துணைத்தலைவர் தி.க. செல்வம், நத்தம் எம்.ஆர்.பி. செல்லம் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் வழக் குரைஞர் பூவை. புலிகேசி, வைக்கம் போராட்டம் எதற்காக நடந்தது, தந்தை பெரியாரின் வருகைக்கு முன் போராட்டத்தின் நிலை என்ன, பெரியாருக்கு பின் அந்தப் போராட்டம் எப்படி மாறியது, பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்குமான தொடர்பு போன் றவை குறித்து சிறப்புரையாற்றினார். 

நகரத் துணைத் தலைவர் செபாஸ்டின் சின்னப்பர் நன்றி யுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் நகரச் செயலா ளர் த. கருணாநிதி, பழ. இராசேந்திரன், க. சதாசிவம் உள்ளிட்ட கழகத்தினரும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *