வாழ்விணை ஏற்பு விழா

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

குடந்தை, ஏப்.14- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பெரியார் கல்வி, சமூகப் பணி அறக்கட்டளை நிதி அறங்காவலர் ரெ. சிவானந்தம் – சரசுவதி ஆகியோரது மகன் சி.மதுசூதனன், தஞ்சாவூர் புதுப்பட்டினம், தில்லை நகர் வ.விசுவநாதன் – பக்கிரியம்மாள் மகள் வி.பவித்ரா, ஆகியோரது வாழ்விணையேற்பு நிகழ்வு 09.04.2023 ஞாயிறு காலை 10.00 மணியளவில் கபிஸ்தலம் ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வாழ்விணையேற்பு விழாவுக்கு மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தலைமை ஏற்றார்.

விழாவுக்கு வருகை புரிந்தோரை பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. விசயக்குமார் வரவேற்றார். கபிஸ்தலம் திமுக செயலாளர் அ.ஜெகதீசன், பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, பாபநாசம் ஒன்றிய கழக தலைவர் தங்க. பூவானந்தம், குடந்தை மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு, பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.தாமரைச்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் கோவி.அய்யாராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கும்பகோணம் மாவட்ட கழக தலைவர் கு.நிம்மதி அய்யாவின் அருந்தொண்டு, அதன் விளைச்சல் பற்றி கொள்கை உரையாற்றினார்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் சுயமரியாதை திருமணம் பற்றி எடுத்துகூறி எல்லோரும் அறிவுவழியை, அறிவியல் வழியை, அய்யாவழியை பின்பற்றுங்கள் என்று கூறி, வாழ்விணையர்களை உறுதிமொழி ஏற்கச்செய்து வாழ்விணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்கள்.

இறுதியாக பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சேகர் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *