தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளைப் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் கழகத் தோழர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய மன்றத்தினர், அறிஞர் குழுக்கள், பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். எனினும், இந்தியாவின் மூத்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் இத்த கைய முழு நாள் நிகழ்வை நடத்தியது பல்வேறு வகைகளிலும் சிறப்புக்குரி யதாகும்.
4 அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தின் மாணவர் தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பது எல்லோ ருக்கும் தெரியும். ஆனால், அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவரும் கூட! ஆசிரியர் அவர்கள் பயிலும்போது சென்னை சட்டக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. (அப்போது தனியே சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் இல்லை)
அந்த வகையில், தன் மாணவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய பாராட்டு விழா இது!
4 காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2003-ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதற்கு ஈடான சிறப்புகுரியது இந்த நிகழ்ச்சி என்று பார்வையாளர்கள் மகிழ்ந்து பாராட்டி யது குறிப்பிடத்தக்கது.
