கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

சென்னை, பிப்.24 –  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து அவருடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது என்று  செய்தியாளர்களிடையே  கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று (23.2.2026) சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (24.2.2026) சென்னை பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களைப் பார்த்து நலம் விசாரித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுடைய உடல்நிலை, இரண்டு நாள்களுக்கு முன்பு சங்கடத்திற்கு உள்ளாகி, மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரைத் தீவிரச் சிகிச்சைப் பிரிவிற்கு ஆட்படுத்தி, மருத்துவர்கள் அத்துணைப் பேரும் தீவிரமான முயற்சி எடுத்த காரணத்தினால், நேற்று அவருடைய உடல்நிலை இருந்ததைவிட, இன்றைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பது ஓர் ஆறுதல் செய்தியாகும்.

ஆகவே, அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அவர் விரைவில் நலமடைந்து, தன்னுடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது.

அத்துணை முயற்சிகளுடன், மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள் அத்துணைப் பேரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலான செய்தியாகும்.

செய்தியாளர்:  வென்டிலேட்டர் சிகிச்சையில் தான் நல்லகண்ணு இருக்கிறாரா?

தமிழர் தலைவர்: இல்லை. நல்ல அளவிற்கு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நம்பிக்கைத் தரக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது என்பது தெம்பூட்டும் செய்தியாகும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *