பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம் மறைவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம்,வை. நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன், (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர்-மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், பேராவூரணி மல்லிகை அச்சக உரிமையாளர், அம்மையாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் (வயது 65) உடல் நலக்குறைவால் 23-02-2026 அன்று மாலை  தஞ்சை தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

இன்று (24-02-2026) மாலை பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.

தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

மறைவுச் செய்தி அறிந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பேராவூரணி சிதம்பரம் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்

தொடர்புக்கு: வை.சிதம்பரம் 9443699500

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *