தேர்தல் நெருங்கினாலே பி.ஜே.பி. அய்.டி., சி.பி.அய்., ஈ.டி. என்கிற ‘அய்சை’ப் பயன்படுத்தத் தொடங்கும்! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி, பிப். 23- தேர்தல் வந்துவிட்டாலே பாஜக அய்சைப் (I-C-E) பயன் படுத்த தொடங்கிவிடும் என தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி
எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் வேலூர் மக்களை சந்திக்க வேண்டியதுள்ளது. அவர்களது கருத்துகளை கேட்டறிந்த பிறகு விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓபிஎஸ் தி.மு.க. கூட்டணிக்கு வருவாரா என்பது தொடர்பான அறிவிப்பு ஏதும் இருந்தால், அதனை முதலமைச்சர் வெளியிடுவார்.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எப்போதுமே சுமூகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால், இது நீண்ட நாளாக இருக்கக்கூடிய உறவு. அதோடு கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய கூட்டணி எங்கள் கூட்டணி. எனவே, நிச்சயமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த கேள்விக்கு, ‘தேர்தல் வந்துவிட்டால் பா.ஜ.க. அய்சைப் (I-C-E) பயன்படுத்த தொடங்கிவிடும். அதாவது, இன்கம்டாக்ஸ் (வருமான வரித்துறை), சிபிஅய் மற்றும் ஈடி (அமலாக்கத்துறை) ஆகியவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அந்த வேலையை தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளனர்’ என கனிமொழி பதிலளித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *