கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.2.2026 அன்று வழங்கினார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அளித்த பேட்டி:

கரோனா காலங்களில் தற்காலிகமாக பணியாற்றி, பின் விடுவிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, படிப்படியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா காலங்களில், தற்காலிகமாக பணியில் இணைந்த, 2,814 பேரில், 2,146 பேருக்கு, ஏற்கெனவே மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, பணி நியமன ஆணை வழங்கப் பட்டது.

மீதமிருந்த, 719 பேருக்கு, ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் குளறுபடிகள் இருந்தன. அவர்களை தனித்தனியாக வரவழைத்து, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. தற்போது, 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், பணி நியமன ஆணை வழங்கப்படும். கடந்த அய்ந்து ஆண்டு கால ஆட்சியில், 5,825 ஒப்பந்த செவிலியர்கள், நிரந்தர பணி ஆணைகள் பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் பயிற்சிக்கு 3 லட்சம் ரூபாய் வரை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் செலுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியில் பயிற்சி கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு 25,000 ரூபாய் பயிற்சி நிதியாக வழங்கப்படுகிறது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *