அம்பேத்கர் பிறந்த நாளில் விவேகானந்தருக்கு மாலையிட்ட பா.ஜ.க. இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்?

1 Min Read

அரசியல்

தெலங்கான மாநில பா.ஜ.க. இளைஞர் அணியில் (BJYM) இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாநில பா.ஜ.க. பெண்கள் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளராகவும், ஆந்திராவின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவரான ஒரு இளம் பெண் இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை அழித்தொழிப்பதுதான் வாழ்நாள் சபதம் என்று பதிவிட்டு வருபவர். 

அம்பேத்கர் பிறந்த நாள் (14.04.2023) அன்று விவேகானந்தர் சிலைக்கு மாலையிட்டு இந்தியாவில் சமூகநீதி மற்றும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். சங்கிகள் என்றாலே தனி ரகம்தான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *