சென்னை, பிப். 22– வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வமான குழு அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை முதல் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் புதிய வரவுகளும், சவால்களும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியே தற்போதும் தொடர்கிறது. இருப்பினும், இந்த முறை கூட்டணியில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
புதிய கட்சிகள்
கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.
2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 234 இடங்களிலும் பின்வருமாறு போட்டியிட்டது:
கட்சி போட்டியிட்ட இடங்கள்
தி.மு.க. 173, காங்கிரஸ் 25, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஅய் தலா 6, அய்யுஎம்எல், கொமதேகதலா 3, மமக 2, தவாக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை தலா 1.
