தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய கட்டுப்பாட்டு அலுவலராக பி.சிறீ வெங்கட பிரியா பொறுப்பு ஏற்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியைத் டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சார்-பதிவாளர், உதவித் தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ (Group-2 & 2A) முதன்மைத் தேர்வுகள் கடந்த 8ஆம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெறுவதாக இருந்தன.

ஆனால், அன்று காலையில் சென்னையில் 3 தேர்வு மய்யங் களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டதால், அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மய்ய ஒதுக்கீட்டுக் குளறுபடி விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர் நடவடிக்கையாகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, அப்பதவிக்கு பி.சிறீ வெங்கட பிரியா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 14ஆம் தேதி பொறுப்பேற்றதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ஹர்பால் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *