சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் அமானுஷ்யமாம்! வீட்டுக்குள் செல்ல அச்சம் என்பதை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வீட்டு வேலைக்காரப் பெண் அன்புக்கரசி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அதனால் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும் கூறி சிலர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்த வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக செய்தி (இந்து தமிழ் திசை, 18.02.2026) வெளிவந்துள்ளது.
அதிகம் வெளிச்சம் பெறாத கிராமங்களில் கூட அல்ல… சென்னை போன்ற நகரங்களிலேயே தங்களின் விளம்பர வெறிக்காக, அமானுஷ்யம் என்ற பெயரில் குழப்பத்தை, மூடநம்பிக்கையை உருவாக்குவது சட்டப்படி தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51 ஏ (எச்) கூறும் “அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை” என்ற அடிப்படையில், ‘அமானுஷ்யம்’ நிறைந்ததாகப் பரப்பப்படும் அந்தக் குறிப்பிட்ட வீட்டில் தங்கி, பயன்படுத்தி மூடநம்பிக்கையை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!
அரசும், காவல்துறையும் இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! மூடநம்பிக்கையை அகற்றிட இத்தகைய செயல்முறைகளே சிறந்த வழிமுறைகளாகும். எப்போதும் திராவிடர் கழகம் இப் பணியில் அரசுக்குத் துணை நிற்கும்!

– கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *