புதுச்சேரி, பிப். 18- புதுச்சேரி மாநிலம் சேதுராப் பட்டைச் சேர்ந்த தீவிரமான செயல் பாட்டாளரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான லோ. பழனி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தற்பொழுது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தி அறிந்தவுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன், மாவட்டக் கழகச் செயலாளர் தி.இராசா மற்றும் சிவக்குமார் ஆகியோர் சேதுராப்பட்டில் அமைந்துள்ள லோ.பழனியின் இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார்கள். தோழருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேல்சிகிச்சைக்காக உயர் மருத்துவ மனையில் சேர்ப்பதற்கான ஆலோசனையும் வழங்கினர்.
உடல்நலம் விசாரிப்பு – ஆறுதல்
Leave a Comment
