திருவனந்தபுரம், பிப்.16 திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர்கள், கொச்சி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி யில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க.வைத் தோற்றுவித்த தீனதயாள் உபாத்யாவின் நினைவைக் கடைப்பிடிக்கும் விதமாக, ரயிலில் தீனதயாள் உபாத்யாயா படத்திற்கு மாலை அணிவித்து, ‘பால் அபிசேகம்’ மற்றும் பூஜை பஜனை செய்தது மட்டுமல்லாமல், ரயில் பயணிகளை வற்புறுத்தி, ‘‘வந்து வணங்கிவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, பிரசாதமும் தந்தனர்.
தண்டனைக்குரிய குற்றம்!
ரயில் பயணம் அமைதியாகவும், ஓய்வெ டுத்துச் செல்வதற்காகவும் குளிர்சாதனப் பெட்டியைத் தேர்தெடுக்கின்றனர். அங்கும் சிறிதளவும் சமூகப் பொறுப்பின்றி இவ்வாறு செய்ததை சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர். பொதுவாக இவ்வாறு செய்வது ரயில்வே விதிகளின்படி அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தனது வேலையைக் காட்டத் துவங்கி விட்டனர்!
ஆனால், பா.ஜ.க.வினரின் ரயில் ஆயிற்றே; இதுவரை வட இந்தியாவில் தான் இதுபோன்ற அவலங்கள் இருந்தன. இப்போது கேரளாவிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியதும் தனது வேலையைக் காட்டத் துவங்கி விட்ட
னர்!
