நேற்றைய (15.2.2026) ‘விடுதலை’யில் வெளிவந்த ஆசிரியர் அறிக்கையில் ‘மதவெறித் தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல் வேறு என்ன?’ என்ற உட்தலைப்பின் கீழ் ‘அந்நாளில்’ என்று தொடங்கும் பாராவைப் பின்வருமாறு திருத்தி வாசிக்கக் கோருகிறோம்.
“அந்நாளில் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் மட்டுமல்ல; பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட அரசியலமைப்புப் பணி மன்றத்திலும் (Constituent Assembly) கூட வந்தேமாதரம் பாடலை – 2 பத்திகளை மட்டுமே பாடி மரியாதை செய்யலாம் என்றுதான் முடிவு எடுத்து அறிவித்தனர்.”
தவறுக்கு வருந்துகிறோம்
ஆ-ர்.
