ஜெயங்கொண்டம், பிப். 15– 12/2/2026 அன்று காலை மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளியின் தாளாளர் அவர்களின் வழிகாட்டலுடன் பள்ளி முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூலகப் பயணத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள கிளை நூலகத்திற்குச் சென்றனர். புத்தகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, நூலக ஒழுங்கு, மற்றும் புத்தகங்களை எப்படித் தேடி வாசிப்பது போன்ற முக்கியமான நூலக விதிமுறைகளை நூலகத் தலைவர் அறிமுகப்படுத்தி விளக் கினார். மாணவர்களின் முகங்களில் புத்தகங்களைக் குறித்த ஆர்வமும் சந்தோசமும் வெளிப்பட்டன. அவர்கள் தனக்குத்தானே பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஆர்வமாக படித்தனர்.
மேலும் அனைத்து மாணவர்களும் உறுப்பினராக சேர்ந்து புத்தகங்களை படித்து பயனடையலாம் என்று கூறினார். அதன்படி மாணவர்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.
இந்த நூலக பயணம் மாணவர்கள் அறிவைப் பெருக்கும் விதமாக அமைந்தது, எதிர்காலத்தில் அதிகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.
முதல்வர் அவர்கள் நூலக பயணம் சென்று வந்த மாணவர்களிடம் “இன்று தலை குனிந்து படித்தால் நாளை தலை நிமிர்ந்து வாழலாம்”. “இன்று நீ நூலை தேடினால் நாளை உன்னை உலகம் தேடும்”. அறிவை விரிவு செய்யவும் உலகத்தை அறிந்து கொள்ளவும் நூலகம் அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
