மருத்துவத் துறையில் புதிய மலர்ச்சி பச்சிளம் குழந்தை பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 15– பச்சிளம் குழந்தை பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டம், ‘தாய்மை செயலி’ திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் (13.2.2026) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு, மதிப்பீடு (PICME) தாய்மை செயலி செயல்பாட்டைத் தொடங்கினார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளில் 20 சதவீதம் 2 கிலோவுக்கும் கீழே குறைந்த எடை உள்ள குழந்தைகளாக உள்ளன. இப்போது 52,000 குழந்தைகள் எடை குறைவான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து கவனிப்புக்கும், இரும்புச் சத்து சொட்டு மருந்து, வைட்டமின் பி3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.8.07 கோடியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

‘தாய்மை செயலி’ என்கின்ற புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி தமிழ்நாட்டில் தாய்சேய் நலச் சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாகும். கர்ப்பிணிகள் பதிவு செய்யப்படும் தளத்திலிருந்து பேறுகாலப் பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி, தடுப்பூசி போன்றவை இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படும். தாய்மை செயலியும் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளின் மரண விகிதமும், தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. 2021-2022இல் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தாய்மார்களின் இறப்பு என்பது 90.5 ஆக இருந்தது. 2022-2023இல் 52 ஆகவும், 2023-2024இல் 45.5 ஆகவும், 2024-2025இல் 39.5 ஆகவும் குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

குழந்தை மரண விகிதம் என்பது 1000 குழந்தைகள் பிறப்புக்கு 2021-2022இல் குழந்தை இறப்பு என்பது 10.4 அளவில் இருந்தது. 2022-2023இல் 10.2 ஆகவும், 2023-2024இல் 8.2 ஆகவும், 2024-2025இல் 7.7 ஆகவும் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை மரண விகிதத்தைக் குறைத்து பூஜ்ஜியம் நிலையை எட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *