மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.15– சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து நரம்போட்டமான சர்தார் படேல் சாலையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு கட்டப்பட்ட புதிய ‘எல்’ வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) காலை 10 மணியளவில் திறந்து வைத்தார்.

அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் 3.2 கி.மீ நீளம் கொண்ட சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை, சென்னை அய்.அய்.டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 61 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

வடிவம் மற்றும் நீளம்: 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் ‘எல்’ (L) வடிவில் இருவழிச் சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்த முடியும்.

தடையற்ற பயணம்

இந்த பாலத்தின் மூலம் அடையாறில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் எந்தவித சிக்னல் தடையும் இன்றி பயணிக்க முடியும். அதேபோல், கிண்டி-அடையாறு மற்றும் OMR-கிண்டி இடையேயான போக்குவரத்தும் சீராகும்.

பாதுகாப்பு வசதிகள்

வளைவுகளில் வாகனங்கள் எளிதாகத் திரும்பும் வகையில் ‘குறுக்கு வெட்டு சாய்வு’ (Superelevation) முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பைக் கருதி 30 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரவு நேரப் பயணத்திற்காக நவீன மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் மூலம், மத்திய கைலாஷ் சந்திப்பில் தினசரி சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இனி நெரிசலின்றி நிம்மதியாகப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *