மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

1 Min Read

புதுடில்லி,ஏப்.16- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்தியப் பிரதேச நீதித்துறையில் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ரூபேஷ் சந்திர வர்ஷ்னி. 

இவரது பெயரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பும் நீதிபதிகள் பஹருல் இஸ்லாம் (1980), பாத்திமா பீவி (1989) ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அந்த அடிப்படையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரூபேஷ் சந்திர வர்ஷ்னியின் நீதித்துறை பணிகள் சிறப்பாக இருந்ததால் அவரது பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. வர்ஷ்னியைத் தவிர, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அனுராதா சுக்லா, சஞ்சீவ் சுதாகர் கல்கோன்கர், பிரேம் நாராயண் சிங், அச்சல் குமார் பாலிவால், ஹிர்தேஷ், அவ்னிந்திர குமார் சிங் ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *