ராகுல் காந்தி பதவி பறிப்பு காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்

2 Min Read

அரசியல், தமிழ்நாடு

திருவள்ளூர்ஏப் 16- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஆவடி ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூ றாகப் பேசியதாக குஜ ராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந் திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப் பளித்தது. இதையடுத்து, அவரது மக்களவை உறுப் பினர் பதவி பறிக்கப்பட்டு அடுத்து வரும் 8ஆண்டு களுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப் பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள காங் கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரு வள்ளூர் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் தலைமை யில், மாவட்ட தலைவர் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்ப ரம், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில், ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலை மறித்து 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட னர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பி னரும் மாநில பொருளா ருமான ரூபி. ஆர். மனோ கரன் தலைமையில் குரோம்பேட்டையில் ரயில் மறியல் போராட் டம் நடைபெற்றது.

அதேபோல் செங்கல் பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சுந்தர மூர்த்தி தலைமையில் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட காங் கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட் டத்தில் மேனாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவரா மன், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூ ராட்சி, தலைவர்கள் நிர் வாகிகள் முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *