மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் தலைவர்கள் பாராட்டு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.14- மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சட்டப்பேரவை தேர்தலை காட்டி அடுத்த சில மாதங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது திமுக அரசு.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க பாஜக முயற்சித்த தடைகளையெல்லாம் தகர்த்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மகளிர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் பேராதரவு திமுக-வுக்கு பெருகிக்கொண்டே போகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: முதலமைச்சர் செய்த இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. இது வெறும் வாக்குக்கானதல்ல. மகளிரின் வலிமைக்கானது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் முதலமைச்சர். திமுக-வுக்கு செல்வாக்கு உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட நினைப்பது கண்டனத்துக்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: முதலமைச்சரின் அறிவிப்பு அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இது அற்புதமான அறிவிப்பு. இதற்கு பொறாமைப்பட்டு திட்டத்தை தடுப்பதற்கு பதிலாக, இதைவிட சிறப்பாக செய்யவேண்டும் என அடுத்த தலைவர்கள் நினைத்தால் தமிழ்நாடு தலைநகரமாகிவிடும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்த்த நிலையில், தமிழ்நாட்டு மகளிருக்கு ரூ.5000 வழங்கியிருப்பது திமுக ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *