நடிகர் விஜய் அவர்களின் நேற்றைய (13.2.2026) பேச்சு குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள முகம் சுளிக்க வைக்கும் கருத்துகள் நாகரிகமானவையல்ல. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறித்துப் பேசும்போது அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. அதிலும் பெண்கள்குறித்து அவதூறாகப் பேசுவது கண்டனத்திற்குரியதாகும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது பொதுவாழ்க்கைக்கு இழுக்காகும்.
இதில் கட்சிக் கண்ணோட்டம் நமக்கில்லை. யாராயினும் அது தவறுதான்! அனைவரும் பாடம் கற்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
