பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலைமீது வழக்கு திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி

Viduthalai
1 Min Read

சென்னை ஏப் .16  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ளார். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை கூறிய பொய்க் குற்றச்சாட்டுக்களை திமுக எதிர்கொள்ளும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். இது தொடர்பாக  மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (15.4.2023) அளித்த பேட்டியில், ‘திமுகவின் சட்டத்துறை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிக் காட்டுதலின் பேரில் அண்ணாமலையின் பொய் குற்றச் சாட்டுக்களை எதிர்க்கொள்ளும். அதற்குரிய வழக்குகள் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடரப் படும்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *