பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலைமீது வழக்கு திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி

1 Min Read

சென்னை ஏப் .16  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ளார். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை கூறிய பொய்க் குற்றச்சாட்டுக்களை திமுக எதிர்கொள்ளும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். இது தொடர்பாக  மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (15.4.2023) அளித்த பேட்டியில், ‘திமுகவின் சட்டத்துறை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிக் காட்டுதலின் பேரில் அண்ணாமலையின் பொய் குற்றச் சாட்டுக்களை எதிர்க்கொள்ளும். அதற்குரிய வழக்குகள் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடரப் படும்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *