நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை தெலங்கானா முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

1 Min Read

சென்னை,ஏப்.16- நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவித் திறந்து வைத்ததற்காக தெலங்கானா முதலமைச்சருக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது 125 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ்-க்கு பாராட்டுகள். புத்தர் சிலைக் கும் தெலங்கானா தலைமைச் செயலகக் கட்டடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவிட வேண்டும் என்ற எண்ணம் சாலப் பொருத்தமானது, பிரமிப்பை ஏற்படுத் துகிறது என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *