மாணவர்கள், இளைஞர்கள் கவனிக்க…

1 Min Read

செயலில் இறங்குக!

இன உணர்வும், பகுத்தறிவும் மிக்க திராவிட சமூகத்தின் தீரர்களான அருமை இளைஞர்களே, மாணவர்களே, தோழர்களே!

நேற்று (16.4.2023) ‘தினமலர்’  என்ற பார்ப்பன நாளேட்டின் வார இதழில் ‘அந்துமணி’ என்ற அக்கிரகார சிண்டு தனக்குத்தானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு பதிலைப் போட்டிருக்கிறது!

கேள்வி: தி.க. வீரமணி சாதித்தது என்ன?

பதில்: தினமும் கருப்புச் சட்டை அணிந்து கொள்கிறாரே, அதுதான் அவர் சாதித்தது!

அந்த அக்கிரகார அபிஷ்டுகளுக்கு பொறிதட்டி புத்திவரும் வகையில் 10வரிகளில் சமூக வலைதளத்தில் ‘தினமலருக்கு’ இடித்துக்காட்டி, திருப்பி சாட்டையை சொடுக்குங்கள்!

#சாதனை சரித்திரம்_வீரமணி என்ற தொடர் குறியுடன் ‘சுருக்கமான சுருக்’ பதிலை கொடுத்து அக்கிரகார நச்சரவு பேனாவின் விஷப்பல்லைத் தட்டுங்கள்!

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *