திராவிடர் தொழிலாளரணி மாநாடு – தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவிற்கு அழைப்பு

0 Min Read

அரசியல்

கழகப் பொறுப்பாளர்கள் 17.4.2023  அன்று காலை, சென்னை – மயிலாப்பூர் இல்லத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்   கே. என். நேரு அவர்களை சந்தித்தனர். தாம்பரத்தில் மே 7 ஆம் தேதி (7.5.2023) நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். மாநாட்டிற்கு வருவதாக அமைச்சர் ஒப்புதல் அளித்தார். மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர்  மு.சேகர், கழக  வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், தாம்பரம்  மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.ராசு, கி.ஏழுமலை, செம்பாக்கம் கு.வைத்தியலிங்கம்  ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *