தமிழ்நாட்டில் 1,072 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட நகரங்களும் மீனவ கிராமங்களும் உள்ளன.
இதில் வாழும் பல லட்சம் மீனவர்கள் கடலை வாழ் வாதாரமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்திய நாட்டின் 4% GTP பொருளாதார வளர்ச்சியில் 1% பொருளாதார வளர்ச்சியைத் தருவது மீன்பிடித் தொழில். மேலும் ஒரு லட்சம் கோடி வெளி நாட்டுச் செலாவணியை ஈட்டித்தருவது மீன்பிடித் தொழில். அதே சமயம் இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்கும் முதல்நிலை பாதுகாப்பு அரணாக, ஊதியம் வாங்காத கடற்படை வீரனாக இந்த நாட்டைப் பாதுகாப்பது மீனவன்தான். இந்தி யாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பொருளாதார சக்தியாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் மீனவன், தனது வாழ்வாதாரத்துக்கு நம்பி யிருப்பது கடலை மட்டும்தான்.
ஆனால் நாகை முதல் ராமேஸ்வரம் வரை வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை கடற்படையும், சிங்கள மீனவர்களும் தொடர்ந்து சிதைத்துவருகின்றனர். இதில் இலங்கை கப்பற்படை மற்றும் அவர்களது ஆதரவோடு கடலில் சுற்றித்திரியும் சிங்கள கடற்கொள்ளையர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டும் வருகின்றனர். அவர்களது படகுகள் மற்றும் விலை உயர்ந்த மீன்பிடிக் கருவிகளையும் கொள்ளை யடித்துச்செல்வது வாடிக்கையாக உள்ளது.
இலங்கை கடற்படையும் சிங்களவர்களும் தமிழர்கள் மீது வன்மத்தோடு நடக்கத் தொடங்கினார்கள். 1980-ஆம் ஆண்டு மீனவர் முனியசாமி சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடங்கி இப்போது வரை 500க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான படகுகள் நாசமாக் கப்பட்டுள்ளன. ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந் திருக்கிறார்கள்.
2016-இல் இழுவை மீன்பிடித் தொழில் தடைச்சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டமும் ஈழப்போரும் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் தொடரக் காரணமாக அமைந்தன. இந்த சட்டம் இலங்கையில் அமலானதற்குப்பிறகு, எல்லை தாண்டிவரும் தமிழ்நாட்டுப் படகுகளைக் கைப்பற்றுவதும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் தீவிரமடைந்தது.
இலங்கையில் யுத்தம் ஓய்ந்து சூழல் மாறியதும் புலம்பெயர்ந்த மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பினார்கள். இலங்கைக் கடற்படைக்கு மட்டுமே அஞ்சிய தமிழ்நாட்டு மீனவர்கள், இப்போது இலங்கை மீனவர்களுக்கும் அஞ்சவேண்டிய நிலை. இதில் வேதனை என்னவென்றால் இவை அனைத்தும் இந்திய கடற்படையின் கண் முன்பே நடப்பது கொடுமையிலும் கொடுமை!
இலங்கை நீதிமன்றத்தால் விசாரணைக்குட் படுத்தப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் படகுகளால் கடல் மாசுபடுகிறது, கொசு உற்பத்தியாகி டெங்கு பரவுகிறது என்று காரணம் கூறி, அவற்றை ஏலம் விட உத்தரவிட்டது இலங்கை மீன்வளத்துறை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 135 படகுகளும் இந்திய மதிப்பில் வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. 09.02.2023 அன்று அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்ற அன்றே தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது
அதே நேரத்தில் இந்திய கடற்படையால் எப்போதாவது ஒருமுறை பிடிபடும் சிங்கள மீனவர்கள் பெயரில் திரியும் கடற் கொள்ளையர்களை அரசியல் கைதிகள் போல் மரியாதையோடு நடத்தி – இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் பேசி சிங்கள வர்களை விடுவிக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன
இதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் வடகடல் எல்லை துவங்கி குமரிக் கடல் வரை கடற்தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றோடு அழித்தொழிக்கும் விதமாக ஒன்றிய அரசு உலக முதலாளிகளுக்கு – சட்டரீதியாக இந்திய கடலையும், கடற்கரையையும் தாரை வார்க்கும் விதமாக – உலக முதலாளிகள் கூட்டமைப்பு (WTO) உருவாக்கிக் கொடுத்த நாசகாரச் சட்டங்களை மீனவர்கள் மீது திணித்து வருகிறது. கடற்கரை மேலாண்மைச் சட்டம் 2020, கடல் மீன்வளர்ப்பு சட்டம், கடல் மீன்பிடி சட்டம், ஆழ்கடல் மீன்பிடி சட்டம், கடல்நீர் வழிப்பாதைச் சட்டம் உள்ளிட்ட நாசகாரச் சட்டங்கள் மீனவர்களைக் கடற்கரை யிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையையும், கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவிடாமல் தடுக்கும் வேலையையும் செய் கின்றன. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் எளிதாக சட்டரீதியாக கடலையும், கடற்கரையையும் கைப்பற்றும் சூழ்நிலை இருக்கிறது.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஜெக தாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டில் முக்கிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்களின் நலன், உரிமைகளை முன்னிறுத்தும் வகையிலும், கச்சத் தீவினை மீட்கும் நோக்கிலும் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். மாநாட்டுத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரி வித்துள்ளது போல, மீனவர் வீட்டுப் பிள்ளைகள் கல்வி, வேலை வாய்ப்பு வட்டத்துக்குள் தலைதூக்க வேண்டும் என்பதே நமது பேரவா!