காவல்துறையினர் முன்னிலையிலேயே ஜெய் சிறீராம் என்று கூச்சலிட்டு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை சுட் டுக்கொலை செய்துள்ளனர் ஹிந்து அமைப்பினர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத் துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப்பிரதேச மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் அத்திக் அகமதுவும், சட்டமன்ற உறுப் பினரான அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது ஜெய்சிறீராம் என்று கூவிக்கொண்டு வந்தவர் களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வழக்குரைஞர் உமேஷ் பால் கொலை தொடர் பாக காவல் நிலைய விசாரணைக் கைதிகளாக அவர்கள் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – இது தொடர்பாக மூன்று பேர் காவல்துறையிடம் சரண் அடைந்துள் ளனர். அதோடு இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில சாமியார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
நடந்தது என்ன?
சனிக்கிழமை (15.4.2023) இரவு நேரத்தில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு மருத்துவ மனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக முழுக் காவல்துறை பாதுகாப்போடு அழைத்து வரப் பட்டனர். இருவரது கைகளிலும் விலங்குகள் பூட்டப்பட்டு இருந்தன. அந்தப்பகுதி முழுவதுமே பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மருத்துவ மனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
அந்த சமயத்தில் அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது காவல்துறையினரின் வாகனத்தில் இருந்து இறங்கிய மூன்று பேர் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கிகளைக் கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டுள்ளனர். திடீரென துப் பாக்கிச் சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தக் காட்சி நேரலையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அத்திக் அகமதுவை மிக அருகில் (பாயிண்ட் பிளாங்க்) குறிவைத்து சுட்டு வீழ்த்தியது தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட் டார். மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க அத்திக் அகமதுவுக்கு அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடன் இருந்த சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மொத்தம்
36 ரவுண்டுகள் அவர்கள் மீது சுடப்பட்டுள்ளது.
காவலர்கள் என்ன செய்தனர்?
இந்தக் கொலைகள் அம்மாநில காவல் துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பு கிறது. பல அடுக்கு காவல்துறை பாதுகாப்பு இருந்தும் அத்திக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்பட்டது எப்படி? துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பிற்காக இருந்தும் கொலையாளிகளுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை? குற்றவாளிகளான அத்திக் மற்றும் அஷ்ரப்பை செய்தியாளர்கள் நெருங்க அனு மதித்தது ஏன்? என காவல் துறையை நோக்கி பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
மூன்று பேர் சரண்
அத்திக் மற்றும் அஷ்ரப்பை கொலை செய்த பிறகு நொடிப் பொழுதில் கொலையாளிகள் மூவரும் காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி என தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோ தரர்கள் இருவரையும் கொலை செய்த வேளை யிலும், அதன் பிறகும் ‘ஜெய் சிறீராம்’ என அவர்கள் மூவரும் தொடர்ந்து முழக்கமிட்டதாக வும் தெரிகிறது. இந்தக் கொலை சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்திக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் முக்கிய செய்தி பகிரும் தளமான ஏ.என்.அய். தெளிவான ஜெய் சிறீராம் என்ற பின்னணி முழக்கத்தோடு காட்சிப் பதிவை செய்தியாக வெளியிட்டுள்ளது
அத்திக் அகமது
60 வயதான அத்திக் அகமது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004 வரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் (2004 முதல் 2009) பதவி வகித்துள்ளார். அத்திக் – ஷாயிஸ்தா பர்வீன் தம்பதியருக்கு அலி, உமர் அகமது, ஆசாத், அஹ்ஸான் மற்றும் அபான் என அய்ந்து மகன்கள். இதில் அவரது மகன் ஆசாத் அண்மையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். உமர் மற்றும் அலி ஆகியோர் சிறையில் உள்ளனர். அஹ்ஸான் மற்றும் அபான் ஆகியோர் குழந் தைகள் பாதுகாப்பு இல்லத்தில் காவல் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அத்திக் அகமதுவின் மனைவியை காவல்துறையினர் எங்கோ மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.