நிட்டி ஆயோக் பரிந்துரை
புதுடில்லி ஏப்.17 மருந்து தயாரிப்பு தொடர்பாக இந்தியாவின் தர விதி முறைகள் பன்னாட்டு அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிகளுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்று நிட்டி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கண் காணிப்புக்கு தனி ஆணையத்தை உருவாக்கவும் நிட்டி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
‘புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் மசோதா 2023’ தொடர் பான கலந்தாலோசனையை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்ட நிட்டி ஆயோக் தனது பரிந்துரையை முன் வைத்துள்ளது. தற்போதைய மசோதா, இந்தியாவின் மருந்து தரக் கட்டுபாடுகளை பன் னாட்டுத் தரத்திலானதாக மாற்று வதாக இருக்க வேண்டும். இந்தியா வின் மருந்து தரக் கட்டுப்பாடு பன்னாட்டு தரத்தில் மாறும்போது, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி அதிகரிக்கும். மேலும், உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் இந்திய மருந்துகளின் தரம் உறுதி செய்யப்படும். காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்று நிட்டி ஆயோக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
இருமல் மருந்தால் சிக்கல்
கடந்த ஆண்டு இந்திய இருமல் மருந்தை குடித்ததால் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந் தைகள் உயிரிழந்தனர். இது இந்திய மருந்து மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. இந் நிலையில், இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாடு பன்னாட்டுத் தரத்தில் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. தற்போது மருந்து மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிப்பதற்கான உரிமத்தை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன. இனி, இந்த உரிமம் வழங்கும் அதிகாரம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வசம் மட்டுமே இருக்கும் என்று புதிய மசோதாவில் ஒன்றிய அரசு முன் மொழிந்துள்ளது. இந்த மாற்றம், இந்திய மருந்து தயாரிப்பில் ஒரே மாதிரியான விதிகள் கடைப்பிடிக்கப் படுவதை உறுதி செய்யும் என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.