காரைக்குடி, பிப். 10- பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு காரைக்குடி மாவட்டத்திலிருந்து இரண்டு ஊர்திகளில் தோழர்கள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை காரைக்குடி குறள் அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை தலைமை வகித்தார். மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி, மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன் கடவுள் மறுப்பு கூறி வரவேற்புரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி தனது உரையில், தந்தை பெரியார் காலத்தில் தஞ்சையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடுகளை நினைவூட்டி, இன்றைய மாநில மாநாட்டிலும் தோழர்கள் கட்டாயம் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் பலரும் தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.
நிறைவுரையாக மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை பேசுகையில், திராவிடர் கழகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், இன் றைய தமிழ்நாட்டின் சவால்களை முன்னோக்கி உணர்ந்து திராவிடத் தின் திசைகாட்டியாக செயல்பட்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியரின் அயராத தொண்டறத்தை எடுத்து ரைத்து, பிப்ரவரி 21 தஞ்சை மாநாட் டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம் என அழைப்பு விடுத்தார்.
மாவட்டத் துணைச் செயலாளர் பொறியாளர் இ.ப. பழனிவேல் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் ப.க. ஆலோசகர் சு. முழுமதி, தேவகோட்டை நகரத் தலைவர் வீ.. முருகப்பன், ப.க. மாவட்டத் துணைச் செயலாளர் இரா. முத்துலட்சுமி, தி.தொ.க. செயலாளர் சொ. சேகர், ஒ. சிறு வயல் ஆறு. பாஸ்கரன், செ. அன் பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் சுயமரியாதை வீரர் நா. பள்ளிகொண்டான் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்தும்,
பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு காரைக்குடி யிலிருந்து இரண்டு ஊர்திகளில் திரளாக பங்கேற்பது எனவும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
