தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.4.2023) சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் : உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஆர்.ஈஸ்வரன், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் டாக்டர் இரா. செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.