ஒருங்கிணைந்த தெ.ஆ. மாவட்ட திராவிடர் கழக செயலாளராகவும், வள்ளலார் மாவட்டக் கழகத் தலைவ ராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய நீண்ட நெடுங் கால கழக செயல்வீரரும், கழகத்தவர்களிடத்தில் அணுக்கமாகவும், பரிவாக வும் நடந்துகொள்பவரும், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற முறையில் உழைத்தவருமான பெண்ணாடம் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தா.கோ. சம்பந்தம் (வயது 79) இன்று (17.4.2023) காலை 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.
பெண்ணாடத்தில் பகுத்தறிவாளர் கழகக் கட்டடம் உருவாவதற்கு இவருடைய முயற்சி முக்கியமானது.
கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற பெண்ணாடம் பரப்புரைக் கூட்டத்தினை – உடல் நலமற்று இருந்த நிலையிலும் – சிறப்பாக நடத்திக் காட்டினார். உடல் நலமற்று இருந்த அவரின் உடல் நலனை விசாரித்து, தக்க மருத்துவ உதவியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்!
இவ்வளவு சீக்கிரம் அவர் மறைவார் என்று சற்றும் எதிர்பாராத நிலை!
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்விணையர் திலகவதி, மகன்கள் கோகுல சாசதி, இராவணன், மகள் வாசுகி ஆகியோ ருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், கழகத் தோழர் களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த இயக்க செயல் வீரருக்கு வீர வணக்கம்!
கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில் கழகத் தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துவர்.
கி.வீரமணி
சென்னை தலைவர்,
17.4.2023 திராவிடர் கழகம்